Published : 09 Dec 2021 12:12 PM
Last Updated : 09 Dec 2021 12:12 PM

உடல்நலக் குறைவால் அமைச்சர் கணேசனின் மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் கணேசனின் மனைவி பவானி.

சென்னை

உடல்நலக் குறைவால் உயிரிழந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனின் மனைவி பவானி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசனின் மனைவி பவானி இன்று காலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். விருத்தாசலத்தில் உள்ள அமைச்சரின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பவானியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பவானி மறைவுக்கு முதல்வர் ஸடாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

"தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசனின் துணைவியார் பவானி அம்மாள் திடீரென்று மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சரின் பொது வாழ்வில் உற்ற துணையாகவும் உறுதிமிக்க ஆதரவாளராகவும் விளங்கிய பவானி அம்மாள் மறைவு பேரிழப்பாகும். தனது ஒவ்வொரு துளி முன்னேற்றத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த வாழ்க்கைத் துணைவியாரை இழந்து வாடும் அமைச்சர் கணேசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x