Published : 08 Dec 2021 05:00 PM
Last Updated : 08 Dec 2021 05:00 PM

தமிழக அரசுக்கு எதிரான போராட்டம்; 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: அதிமுக அறிவிப்பு

கோப்புப் படம்

சென்னை

தமிழக அரசை கண்டித்து நாளை நடைபெற இருந்த போராட்டம் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து -அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

"அதிமுக சார்பில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் 9.12.2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 11.12.2021 - சனிக் கிழமை காலை 11 மணியளவில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x