

பொருளாதாரம், பெண்ணுரிமை, தொழிலாளர் நலனுக்காக டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"இந்திய அரசியல் சாசன சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று!
பொருளாதாரம், பெண்ணுரிமை, தொழிலாளர் நலம் உட்பட பல்வேறு துறைகளில் டாக்டர். அம்பேத்கர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்."
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.