Published : 01 Dec 2021 04:25 PM
Last Updated : 01 Dec 2021 04:25 PM

டிசம்.3-ல் சென்னையில் எங்கெங்கு ஒரு நாள் மின் தடை?: மின்வாரியம் அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் டிசம்பர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தரமணி பகுதியில் ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"சென்னையில் 03.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தரமணியில்: சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, எம்.ஜி.ஆர் நகர், தரமணி, கானகம் மெயின் ரோடு, வி.வி கோயில் தெரு." ஆகிய இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x