Published : 18 Nov 2021 05:25 PM
Last Updated : 18 Nov 2021 05:25 PM

நவ.20-ம் தேதி சென்னையில் எங்கு ஒரு நாள் மின்தடை?- தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்

கோப்புப் படம்

சென்னை

மின் இணைப்புப் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நவ.20-ம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னையில் 20.11.2021 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன்படி, தாம்பரம் பகுதியில் கடப்பேரி சிட்லம்பாக்கம் 2-வது மற்றும் 3-வது மெயின் தெரு, நீதிபதி காலனி, பால விநாயகர் கோயில் தெரு, மீனாட்சி தெரு, பெரியார் தெரு (1 முதல் 7-வது குறுக்குத் தெரு), ஐயப்பா தெரு, எஸ்.பி.ஐ காலனி, காந்தி தெரு (1-வது மற்றும் 2-வது குறுக்குத் தெரு), அண்ணா தெரு, நேரு தெரு, பல்லாவரம் ரோடு, இந்திரா காந்தி ரோடு, ஒலிம்பியா கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும்''.

இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x