Published : 17 Nov 2021 05:16 PM
Last Updated : 17 Nov 2021 05:16 PM

தண்டவாளப் பராமரிப்புப் பணி; 4 நாட்கள் இரவு நேர ரயில் சேவை மாற்றம்: தெற்கு ரயில்வே

தண்டவாளப் பராமரிப்புப் பணி காரணமாக நான்கு நாட்கள் இரவு நேர ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னை கோட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பிரிவில் நவம்பர் 20, 24, 27 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8 மணி முதல் 11.45 மணி வரை (4 நாட்கள்) பாதை புதுப்பித்தல் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்ட போக்குவரத்துத் தடைகள் காரணமாக கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி பின்வரும் ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ரயில் எண். 17229 திருவனந்தபுரம் சென்ட்ரல் - செகந்திராபாத் ஜே.என் டெய்லி சபரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்படும் ரயில், நவம்பர் 20, 24, 27 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்படும் (3 மணி நேரம் தாமதமாக).

இதேபோல் ரயில் எண்.16526 கேஎஸ்ஆர் பெங்களூரு - கன்னியாகுமரி டெய்லி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்படும் ரயில், நவம்பர் 20, 24, 27 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 9.10 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரிலிருந்து புறப்படும் (ஒரு மணி நேரம் தாமதமாக)".

இவ்வாறு ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x