Published : 06 Nov 2021 03:56 PM
Last Updated : 06 Nov 2021 03:56 PM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து: விநாடிக்கு 26,000 கன அடியாக அதிகரிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சேலம்

கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 26,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று வரை அணைக்கு 15,740 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 10,260 கன அடி நீர் வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 26,000 கன அடி அதிகரித்துள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து கனமழை நீடித்தால் நான்கே நாட்களில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x