Published : 06 Oct 2021 02:39 PM
Last Updated : 06 Oct 2021 02:39 PM

தென்காசி மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85% வாக்குகள் பதிவு

பிரதிநிதித்துவப் படம்

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் 39.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்.6 ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் 39.85% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, ஆலங்குளம் ஊராட்சியில் 40.61%, கடயம் ஊராட்சியில் 39.05%, கீழப்பாவூரில் 39.02%, மேலநீதிநல்லூரில் 42.80%, வாசுதேவநல்லூரில் 38.05% என மொத்தமாக 39.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x