Last Updated : 15 Sep, 2021 03:11 PM

 

Published : 15 Sep 2021 03:11 PM
Last Updated : 15 Sep 2021 03:11 PM

இலங்கை - காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து: புதுவை முதல்வருடன் இலங்கை அரசு பிரதிநிதிகள் ஆலோசனை

இலங்கை - காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க புதுவை முதல்வருடன் இலங்கை அரசு பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்று வந்த இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலர் மற்றும் முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்தனர்.

பலத்த பாதுகாப்புடன் வந்த அவர்கள் முதல்வர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரபிரியங்கா, அரசு செயலர் விக்ராந்த் ராஜா ஆகியோர் இருந்தனர்.

ஆலோசனை தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இலங்கை -காரைக்கால் மீனவர்கள் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கண்டு நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகப் பேசினர். காரைக்கால் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தினைத் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x