சிரியாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

சிரியாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
Updated on
1 min read

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிரியா அரசு ஊடகம் தரப்பில், “இஸ்ரேல் ராணுவத்தினர் எல்லையில் வான்வழித் தாக்குதலை நடத்தினர். டமாஸ்கஸில் உள்ள ராணுவ நிலைகளையும் தாக்கினர். ஹோம்ஸ் நகரிலும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிரிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்தும் உள்நாட்டுப் போருக்கு ஈரான் முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும், ஈரான் தனது நாட்டு ராணுவ வீரர்களை சிரிய பாதுகாப்புப் படைக்கு ஆதரவாக சண்டையிட அனுப்பி வைத்துள்ளது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை அந்த நாடு மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in