

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல்துறை மண்டல இயக்குநர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றிய கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இப்பணி கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடந்து வருகின்றன.
இங்கு 800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் இன்று கீழடியில் மத்திய தொல்லியல்துறை மண்டல இயக்குநர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். அவருக்கு அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் காண்பிக்கப்பட்டன.
மேலும் பணிகளை துல்லியமாக மேற்கொள்ள மத்திய மண்டல இயக்குநர் ஆலோசனை வழங்கினார். அவருடன் தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் உடனிருந்தார்.