இஸ்லாமியர்கள் இடஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரிய மனு தள்ளுபடி

இஸ்லாமியர்கள் இடஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இடஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாலுதீன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2011-க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இஸ்லாமியர்கள் மக்கள் தொகை 50 சதவீதம் உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த சூழலில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை.

பக்கத்த மாநிலமான கேரளாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு 12 சதவீதம், ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சமீபத்தில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில்

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், இடஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in