Published : 07 Jul 2021 09:19 PM
Last Updated : 07 Jul 2021 09:19 PM

ஈன்றெடுத்த நாளிலேயே எனைவிட்டுப் பிரிந்தாயே: மோகன் குமாரமங்கலம் உருக்கம்

தனக்குத் தெரிந்த மிகவும் சக்திவாய்ந்த பெண் தனது அம்மாதான் என்று மோகன் குமாரமங்கலம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும், மோகன் குமாரமங்கலத்தின் தாயாருமான கிட்டி குமாரமங்கலம், டெல்லியில் அவரின் வீட்டில் நேற்று கொலை செய்யப்பட்டார்.

ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம்(வயது67), டெல்லியில் உள்ள ஆனந்த்விஹார் பகுதியில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு வந்த சலவை செய்யும் தொழிலாளி உள்ளிட்ட 3 பேர் கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, அவரைக் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் தனது தாயின் மறைவு பற்றி குமாரமங்கலம் ட்விட்டர் பக்கத்தில், "எனக்குத் தெரிந்த மிகவும் சக்திவாய்ந்த பெண் எனது அம்மாதான். அவர்தான் எனக்கு நன்மை எது தீமை எதுவென்பதைக் கற்றுக்கொடுத்தார். நான் இன்று என்ன நிலையில் இருக்கிறேனோ அதற்கு அம்மா தான் காரணம். எனது தோல்விகளில் அவர் துவண்டார், எனது வெற்றிகளில் அவர் மகிழ்ந்தார், என்மீது நிபந்தனையற்ற அன்பைச் செலுத்தினார். என்னை ஈன்றெடுத்த நாளிலேயே என்னைப் பிரிந்தார்" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x