Last Updated : 18 Jun, 2021 07:00 PM

 

Published : 18 Jun 2021 07:00 PM
Last Updated : 18 Jun 2021 07:00 PM

அரியலூர் கார் விபத்தில் தந்தை, மகள்கள், பேத்தி பலி: குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்

விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் கார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே சாலையோரப் புளிய மரத்தில் இன்று (ஜூன் 18) கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

கீழப்பழுவூர் அடுத்த வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (60). இவர் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், வெற்றியூர் கிராமத்தில் தான் கட்டிவரும் வீட்டைப் பார்க்க, இன்று காரில் ராமமூர்த்தி, தனது மனைவி, 2 மகள்கள், 3 பேரக் குழந்தைகளுடன் வந்தார்.

கீழப்பழுவூர் அடுத்த சாத்தமங்கலம் அருகே கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக, சாலையோரப் புளிய மரத்தில் மோதியது. இதில் ராமமூர்த்தி, மூத்த மகள் நாகவள்ளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இளைய மகள் நாகலட்சுமி (22) உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நாகலட்சுமி மகள் ரித்திகா (1) உயிரிழந்தார்.

2 குழந்தைகள், ஓட்டுநர், ராமமூர்த்தி மனைவி மோகனா (55) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x