ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 50,53,748 ஆக அதிகரிப்பு

ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 50,53,748 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

ரஷ்யாவில் புதிதாக 9,289 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,289 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,53,748 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 401 பேர் கரோனாவுக்கு பலியாக, மொத்த பலி எண்ணிக்கை 1,20,807 ஆக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இதுவரை 11% பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.

மேலும் ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கரோனா தடுப்பூசிகள் அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in