Last Updated : 18 May, 2021 11:44 AM

 

Published : 18 May 2021 11:44 AM
Last Updated : 18 May 2021 11:44 AM

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் உயிரிழப்பு; தஞ்சாவூரில் சோகம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மனைவி இறந்த சில மணி நேரத்திலேயே கணவர் இறந்தது உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை கரந்தை நாராயணன் கொத்தன் தெருவைச் சேர்ந்தவர் மருதையா (வயது 75). இவருடைய மனைவி ஜெயா (70). இவர்கள் 2 பேரும் ஆரம்பத்தில் சமையல் வேலை செய்து வந்தனர்.

வயதான பின்பு அந்த வேலைக்குச் செல்லாமல் தனது மகள் வீட்டில் வசித்து வந்தனர். கணவன் - மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயா வயது முதிர்வு காரணமாக சரியாகச் சாப்பிட முடியாமல் இருந்தார். இதைப் பார்த்து மருதையா மிகவும் மன வேதனை அடைந்தார். அவரும் சரிவரச் சாப்பிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஜெயா திடீரென இறந்துவிட்டார்.

இதையறிந்த மருதையா அதிர்ச்சி அடைந்தார். ஜெயா இறந்த தகவலை அவரது மகள், உறவினர்களுக்குத் தெரிவித்தார். அவர்களும் வந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

மனைவி இறந்ததால் மன வேதனையில் இருந்த மருதையா யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். திடீரென இரவு 9 மணி அளவில் மருதையா மூச்சுப் பேச்சு இன்றி, மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் எழுப்பியபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மனைவி இறந்த சில மணி நேரத்திலேயே கணவர் இறந்தது உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாழ்வில் இணைபிரியாத தம்பதியினர் இறப்பிலும் இணை பிரியவில்லை. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ஒரே ஒரு மகன் இருந்தார். அவர் ஏற்கெனவே இறந்து விட்டார். தம்பதியினரின் உடல்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிச் சடங்கு நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x