Last Updated : 07 May, 2021 07:49 PM

 

Published : 07 May 2021 07:49 PM
Last Updated : 07 May 2021 07:49 PM

ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளால் நெல்லையில் அரசுப் பேருந்துகளில் கூட்டம் குறைந்தது

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளால் அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் போக்குவரத்து கழகத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கரோனா 2-வது அலையை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. புதிய கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தன.

இரவு நேர ஊரடங்கு காரணமாக திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து கழக கோட்டத்தில் 50 சதவிகித பேருந்துகள் 50 சதவிகித பயணிகளுடன் இரவு 10 மணிவரை இயக்கப்படுகின்றன.

பெரிய நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டுள்ளதால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது.

பல்வேறு வழித்தடங்களில் குறைவான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவதால் அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த இழப்பை ஈடுகட்ட மத்திய, மாநில அரசுகள் போக்குவரத்து கழகத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x