Last Updated : 20 Apr, 2021 11:48 AM

 

Published : 20 Apr 2021 11:48 AM
Last Updated : 20 Apr 2021 11:48 AM

புதுச்சேரியில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து

கரோனாவால் இரண்டாம் ஆண்டாக புதுச்சேரியில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவடத்தில் உள்ள கூவாகம்போல் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் உள்ளது. கரோனா அதிகரிப்பு காரணமாக நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு இங்கு கூத்தாண்டர் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

தற்போது கரோனா 2-ம் அலை காரணமாக இவ்வாண்டும் கூத்தாண்டவர் திருவிழாவைக் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதுபற்றி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் தரணி கூறுகையில், "புதுச்சேரி கூத்தாண்டவர் கோயிலில் நடக்கும் திருவிழாவுக்கு மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருநங்கையர் பெரும் அளவில் பங்கேற்பார்கள். கரோனாவால் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக கூத்தாண்டர் திருவிழா ரத்தாகியுள்ளது. இன்று கொடியேற்றதுடன் விழா தொடங்கி வரும் 27, 28-ம் தேதிகளில் சிறப்பு நிகழ்வுகள் நடப்பதாக இருந்தன. கரோனா இரண்டாம் அலையால் விழாவை ரத்து செய்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x