Last Updated : 29 Mar, 2021 09:44 PM

 

Published : 29 Mar 2021 09:44 PM
Last Updated : 29 Mar 2021 09:44 PM

தாமதமானதால் இளையான்குடியில் பிரச்சாரம் செய்யாமல் சென்ற சரத்குமார்: ஏமாற்றமடைந்த வேட்பாளர்

மானாமதுரை தொகுதி இளையான்குடியில் காரைவிட்டு இறங்காமல் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் சிவசங்கரியிடம் பொன்னாடை பெற்றுக் கொண்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி இளையான்குடிக்கு தாமதமாக வந்ததால் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்யாமல் புறப்பட்டுச் சென்றார். இதனால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏமாற்றமடைந்தார்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவசங்கரி என்பவர் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று இளையான்குடியில் வாள்மேல் நடந்த கோயில் அருகே பிரச்சாரம் செய்வதாக இருந்தது. மாலை 3.30 மணிக்கு சரத்குமார் இளையான்குடி வந்தார்.

ஆனால் காரில் இருந்து இறங்கவில்லை. இதையடுத்து வேட்பாளர் சிவசங்கரி, சரத்குமாரிடம் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டு கொண்டார். ஆனால் தாமதமாகிவிட்டதால் தான் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிரச்சாரம் போகிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து வேட்பாளருக்கு மட்டும் வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் வேட்பாளரும், அவரது ஆதரவாளர்களும் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து வேட்பாளர் சிவசங்கரி கூறுகையில், ‘‘முதுகுளத்தூர் பிரச்சாரத்திற்கு நேரமானதால், இளையான்குடியில் பிரச்சாரம் செய்யாமல் சென்றார்,’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x