Published : 16 Mar 2021 01:05 PM
Last Updated : 16 Mar 2021 01:05 PM

ஹாட் லீக்ஸ்: மந்திரியை உரசும் மருதுசேனை!

திருமங்கலம்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடும் திருமங்கலத்தில் அமமுக கூட்டணி வேட்பாளராக மருதுசேனை நிறுவன தலைவர் ஆதிநாராயணத் தேவர் போட்டியிடுகிறார். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை உதயகுமார். “அகமுடையார் தொகுதியை ஆக்கிரமித்த அந்நியன்” என்று உதயகுமாருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவந்தார் ஆதிநாராயணன்.

சமீபத்தில், திருமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் விஜயனின் மகள் காதல் திருமண விவகாரத்தில் அகமுடையார் சாதியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார். அப்போது, “கொலையாளிகளை அமைச்சர்தான் காப்பாற்றுகிறார்” என்று போராட்டமே நடத்தினார் ஆதி. அடுத்த சில நாட்களில் கொலையாளிகளில் ஒருவர் கொல்லப்பட, உடனே ஆதிநாராயணன் மீது வழக்குப்போட்டு உள்ளே தள்ளியது போலீஸ்.

இதற்கும் காரணம் உதயகுமார் தான் என கருவிக் கொண்டிருந்த ஆதி, உதயகுமாரை தோற்கடிப்பதே எனது லட்சியம் என்று அறிவாலயம் பக்கம் ஆதரவுக் கடிதத்தோடு சுற்றிக்கொண்டிருந்தாராம். அவரை வளைத்துப் பிடித்து உதயகுமாருக்கு எதிராக நிறுத்தி இருக்கிறார் டிடிவி. இதனால் சில பகுதிகளில் ‘டிஸ்டிரிபியூஸன்’ லெவல் எகிறும் போல் தெரிகிறது!

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x