Last Updated : 08 Mar, 2021 06:47 PM

 

Published : 08 Mar 2021 06:47 PM
Last Updated : 08 Mar 2021 06:47 PM

முதல்வரை அவதூறாகப் பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு; ஏப்.9-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஏப்.9-ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் ராமநாதன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதியோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் கடந்த பிப்.8-ம் தேதி திமுக சார்பில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அரசை பற்றி மு.க.ஸ்டாலின் அவதூறாகப் பேசினார்.

ஏற்கெனவே முதல்வரைப் பற்றி மு.க.ஸ்டாலின் அவதூறாகப் பேசக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா ஏப்.9-ம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x