நாடு முழுவதும் புதிதாக 17,407 பேருக்குக் கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் புதிதாக 17,407 பேருக்குக் கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

நாடு முழுவதும் புதிதாக 17,407 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 89 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக
17,407 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,923 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,435 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளையில், கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 14,031 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,08,26,075 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.03% ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை, நாடு முழுவதும் 1,66,16,048 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in