Last Updated : 03 Mar, 2021 10:31 AM

 

Published : 03 Mar 2021 10:31 AM
Last Updated : 03 Mar 2021 10:31 AM

டெல்லி முனிசிபல் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் இடைத்தேர்தலில் 5 வார்டுகளில் 4ல் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட 5 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே ஐந்தில் 4 வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.

ஷாளிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோஹினி சி உள்ளிட்ட 4 வார்டுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சவுஹான் பாங்கார் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

ஏற்கெனவே இந்த 5 வார்டுகளில் 4 ஆம் ஆத்மி வசமே இருந்தது. ஷாளிமார் பாக் மட்டும் பாஜகவசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தல் முடிவு இன்று பிற்பகலில் முழுமையாகத் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x