Published : 23 Feb 2021 07:11 PM
Last Updated : 23 Feb 2021 07:11 PM

ஆப்கானிஸ்தானில் கரோனா தடுப்பு மருந்து போடும் பணி தொடக்கம்

ஆப்கானிஸ்தானில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில், “ஆப்கானிஸ்தானில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்க உள்ளது. முதல் கட்டமாக 5,00,000 பேருக்கு கரோனா தடுப்பு மருந்து போடப்பட உள்ளது. மருந்துவர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இம்மாத இறுதியில் கரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட்டன.

இந்தியாவிலிருந்து சுமார் 5 லட்சம் டோஸ்கள் கரோனா தடுப்பு மருந்துகள் (அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பு மருந்துகள்) ஆப்கானிஸ்தானிற்கு இம்மாதம் வழங்கப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டது.

இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கரோனா பரவல் ஒருபுறம் இருக்க, பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x