Last Updated : 22 Feb, 2021 08:57 PM

 

Published : 22 Feb 2021 08:57 PM
Last Updated : 22 Feb 2021 08:57 PM

மடப்புரம் காளி கோயிலில் கிடா வெட்டி தொண்டர்களுக்கு விருந்து: தேர்தலில் சீட் கிடைக்க வேண்டி அதிமுக எம்எல்ஏ நாகராஜன் ஏற்பாடு

திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் கிடா விருந்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ நாகராஜன்.

திருப்புவனம்

மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் இன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் அதிமுக தொண்டர்களுக்கு கிடா விருந்து வைத்தார்.

மானாமதுரை தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் நாகராஜன். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வென்றவர். இந்நிலையில் மீண்டும் மானாமதுரைத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு தலைமையிடம் முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளை மகிழ்விக்கும் வகையில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கிடா வெட்டி விருந்து வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்றனர்.

ஆனால் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டியும் கிடா விருந்து வைத்ததாக எம்எல்ஏ நாகராஜன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ முதல்வர், துணை முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு பயிக்ர் கடன் ரத்து, காவிரிக் கூட்டு குடிநீர் திட்டம், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் என மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகின்றனர்.

வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி விருந்து வைக்கப்பட்டது. மடப்புரம் காளியிடம் வேண்டினால் நினைத்து நடக்கும், என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x