Published : 22 Feb 2021 09:07 AM
Last Updated : 22 Feb 2021 09:07 AM

தமிழகத்தில் விசிகவின் தேவை இரு அணிகளிலுமே இருக்கிறது: திருமாவளவன் பெருமிதம்

தேர்தல் கூட்டணி அரசியலில் தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தி. விசிகவின் தேவை இரு அணிகளிலுமே இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் ஒரு கட்சி கூட்டணி அமைவதே மிகப் பெரியது. அப்படியிருக்க அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் விரும்பும் கட்சியாக விசிக இருந்துவருகிறது.

விசிக ஒருபோதும் தேர்தல் நேரத்தில் பந்தை இங்கும் அங்கும் அசைத்துப் பார்த்ததில்லை. ஆனால், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க விசிக விரும்பி அழைப்பதுண்டு.

அப்படி ஓர் இடத்தை விசிக உருவாக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தவிர்க்க முடியாத கட்சி" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x