Last Updated : 19 Feb, 2021 09:34 AM

 

Published : 19 Feb 2021 09:34 AM
Last Updated : 19 Feb 2021 09:34 AM

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரிப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயந்திமாலா (30) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை. இந்த ஆலை அச்சங்குளத்தில் இயங்கி வருகிறது.

இதனை விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல், சாத்தூரைச் சேர்ந்த ராஜா, கீழச்செல்லையாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார், பொன்னுப்பாண்டி, ஏழையிரம்பண்ணையைச் சேர்ந்த வேல்ராஜ் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளனர்.

இந்த பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு பெண் இன்று பலியானார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயந்திமாலா என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 16 பேர் சாத்தூர், மதுரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி (57) என்பவரையும், மற்றொரு குத்தகைதாரரான வேல்ராஜ் (55) என்பவரையும் ஏழையிரம்பண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x