Published : 18 Feb 2021 12:10 PM
Last Updated : 18 Feb 2021 12:10 PM

ஆப்கன் - ஈரான் எல்லையில் 500 டேங்கர் லாரிகள் வெடித்து விபத்து: சேட்டிலைட் புகைப்படம் வெளியீடு

ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையில் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த 500 டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளான சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையோரத்தில் ஹெராத் மாகாணத்தில் வழியாக ஈரானிலிருந்து எரிபொருள்கள் வந்தடையும் , இந்த நிலையில் சனிக்கிழமை மதியம் ஹெராத் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேக்கர் லாரிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில் 500-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் கருகின. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக ஹெராட் மாகாணமே இருளில் முழ்கியது. இந்த நிலையில் இந்த விபத்தின் சேட்டிலைட் புகைப்படங்களை மாக்ஸர் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x