Published : 16 Feb 2021 06:44 PM
Last Updated : 16 Feb 2021 06:44 PM

ஹாங்காங்கில் கரோனா கட்டுப்பாடுகள் 18ஆம் தேதி முதல் தளர்வு

வரும் வியாழன் முதல் ஹாங்காங்கில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் சோபியா சான் கூறும்போது, “கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. அன்றாட பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணாக மாறியுள்ளது. எனவே பிப்ரவரி 18ஆம் தேதி முதல் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு செய்துள்ளோம்.

வணிகங்கள், சலூன்கள், பார்க், சினிமா, விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவை கட்டுப்பாட்டுடன் இயங்கும். ஆனால், பொது இடங்களில் இரண்டு பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற கட்டுப்பாடு தொடர்ந்து இருக்கும்” என்றார்.

ஹாங்காங்கில் 10,797 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் பலியாகி உள்ளனர்.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x