Published : 15 Feb 2021 10:18 PM
Last Updated : 15 Feb 2021 10:18 PM

வீரன் பொல்லானுக்கு சிலையுடன் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி உறுதி

தீரன் சின்னமலையின் படைத் தளபதியாக வீரன் பொல்லானுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைபெற்ற அருந்ததியர் ஆதரவு மாநாட்டில் உரையாற்றிய முதல்வர், "சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத் தளபதியாக வீரன் பொல்லானுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.
இவர் அருந்ததியர் சமூதாயத்தை சேர்ந்தவர் என்றும், ஆங்கிலேயர் படையில் மாறுவேடத்தில் இருந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு ஆங்கிலேயர்களைப் பற்றிய தகவல்களை ரகசியமாக வந்ததாகவும், இதை அறிந்த ஆங்கிலேயர்கள் அவரை சுட்டுக்கொன்றதாகவும் வரலாறு கூறுகிறது.

வீரன் பொல்லானின் வீரத்தினை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் அவருக்கு முழு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற செய்தியையும், அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த மாநாட்டில் அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகிறேன்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x