மகாராஷ்டிராவில் சாலை விபத்து: 15 தொழிலாளர்கள் பரிதாப பலி; இருவர் காயம்

மகாராஷ்டிராவில் சாலை விபத்து: 15 தொழிலாளர்கள் பரிதாப பலி; இருவர் காயம்
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஞாயிறு நள்ளிரவு சரக்கு லாரி கவிழ்ந்து ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் பலியாகினர். இருவர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 7 பேர் ஆடவர், 6 பேர் பெண்கள், இரண்டு குழந்தைகள் அடக்கம்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோன் மாவட்டம், யவல் தாலுகாவுக்கு உட்பட்ட கிங்காவோன் கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லாரியில் இருந்தவர்களில் பலரும் அபோதா, கேராலா, ரேவர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள்.

இந்த விபத்தில் ஷேக் ஹூசேன் ஷேக் (30), சர்ஃபராஸ் கசம் தாண்ட்வி (32), நரேந்திர வாமன் பாக் (25), திகம்பர் மாதவ் (55), திதர் ஹூசைன் தாத்வி, சந்தீப் யுவராஜ் பரேராவ் (27), அசோக் ஜகன் (40), துராபாய் அசோக் பாக் (3), சங்கீதா அசோக் பாக் (35), சமனாபாய் இங்லே (24), காமாபாய் ரமேஷ் (45), சப்னூர் ஹூசைன் தாட்வி (53) ஆகியோர் விபத்தில் இறந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in