Last Updated : 13 Feb, 2021 07:22 PM

 

Published : 13 Feb 2021 07:22 PM
Last Updated : 13 Feb 2021 07:22 PM

கீழடி 7-ம் கட்ட அகழாய்வு: கானொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைப்பு

கீழடியில் நடந்த 7-ம் கட்ட அகழாய்வு பணி தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருகில் தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம்.

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணியை கானொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஐந்தாம் கட்ட அகழாய்வில் 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்தன. இதில் 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சமீபத்தில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று சென்னையில் இருந்தபடியே கானொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வு தமிழக தொல்லியல்துறை மூலம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடக்கின்றன.

கீழடியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், கோட்டாட்சியர் முத்துகலுவன், ஊராட்சித் தலைவர்கள் வெங்கடசுப்ரமணியன், தீபலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறுகையில், ‘‘7-ம் கட்ட அகழாய்வு 6 மாதங்கள் நடக்கும். 2 ஏக்கரில் ரூ.12.21 கோடியில் சர்வதேச தரத்தில் கீழடி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் திறக்கப்படும். இதில் இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வைக்கப்படும்,’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x