Last Updated : 13 Feb, 2021 04:09 PM

 

Published : 13 Feb 2021 04:09 PM
Last Updated : 13 Feb 2021 04:09 PM

புதுச்சேரியில் புதிதாக 24 பேருக்குக் கரோனா; 5,510 பேருக்கு இதுவரை தடுப்பூசி

புதுச்சேரியில் இன்று புதிதாக 24 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (பிப்.13) வெளியிட்டுள்ள தகவல்:

''புதுச்சேரி மாநிலத்தில் 2,582 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 18, காரைக்கால் - 2, மாஹே - 4 என மொத்தம் 24 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. இன்றைய தினம் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 656 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 39 ஆயிரத்து 440 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 46 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 45 பேரும் என புதுச்சேரி மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 115 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 169 பேரும் என மொத்தம் 284 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 24 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 500 (97.62 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 6 லட்சத்து 3 ஆயிரத்து 831 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 1 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், மருத்துவப் பணியாளர்கள் 5,256 பேர், முன்களப் பணியாளர்கள் 254 பேர் என மொத்தம் 5,510 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.''

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x