

ரஷ்யாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,038 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40, 27,748 அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரஷ்யாவில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் 20 ஆயிரத்துக்கும் கீழே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவில் கரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு மக்களுக்கு ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.