Published : 09 Feb 2021 08:19 PM
Last Updated : 09 Feb 2021 08:19 PM

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: பாதுகாப்புப் படையினர் 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஹெராட் இஸ்லாம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் நான்கு பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் ஹெராட் இஸ்லாம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பை தலிபான்கள் நடத்தி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பு குறித்து தலிபான்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அவ்வப்போது ஆப்கன் அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையேயான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அவ்வப்போது குண்டுவெடிப்பு சம்பவங்களில் தலிபான்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், இன்று குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x