Published : 06 Feb 2021 04:50 PM
Last Updated : 06 Feb 2021 04:50 PM

கணக்குக் கேட்கிறவர் அல்ல; கணக்கை முடிக்கிறவர் ஸ்டாலின்- நாஞ்சில் சம்பத் ஆவேசம்

கணக்குக் கேட்கிறவர் அல்ல; கணக்கை முடிக்கிறவர் ஸ்டாலின் என்று திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பிரச்சாரக் கூட்டங்கள், பேரணிகள் களைகட்டி வருகின்றன.

அந்த வகையில் இன்று நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் பேசும்போது, ''10-ம் தேதி தேர்தல் ஆணையர் வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கிற அன்றைக்கு இவர்களுடைய (அதிமுக) நாட்கள் முடிந்து விடும். இவர்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன.

உங்களைக் கணக்குக் கேட்பவராக ஸ்டாலின் இருக்க மாட்டார். உங்களுடைய கணக்கை முடிக்கிறவராக அவருடைய ஆட்சி இருக்கும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x