Last Updated : 03 Feb, 2021 03:34 PM

 

Published : 03 Feb 2021 03:34 PM
Last Updated : 03 Feb 2021 03:34 PM

புதுச்சேரியில் புதிதாக 23 பேருக்குக் கரோனா; ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 23 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (பிப்.3) தெரிவித்துள்ள தகவல்:

''புதுச்சேரி மாநிலத்தில் 2,184 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 8 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், மாஹேவில் 10 பேருக்கும் என மொத்தம் 23 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. மேலும் மாஹேவைச் சேர்ந்த 64 வயது முதியவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 39 ஆயிரத்து 146 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் மருத்துவமனைகளில் 120 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 159 பேரும் என மொத்தம் 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 215 (97.62 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 82 ஆயிரத்து 116 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 38 ஆயிரத்து 13 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது''.

இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x