மானாமதுரை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

மானாமதுரை அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

மானாமதுரை அருகே மூங்கில ஊரணி தாயார் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் பிரஜீன் (10), பாரதிராஜா மகன் ஜஸ்வந்த் பிரியன் (9) ஆகிய இருவரும் இன்று கீழக்கொம்புகாரநனந்தல் கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தனர். இதில் இருவரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதையறிந்த பெற்றோர், உறவினர்கள், சிறுவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இறந்த சிறுவர்களின் பெற்றோருக்கு எம்எல்ஏ நாகராஜன் ஆறுதல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in