சென்னை துறைமுக ஆணையத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025’ நிறைவு - ‘இந்து தமிழ் திசை’யுடன் இணைந்து நடத்திய போட்டிக்கான பரிசளிப்பு விழா

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அதிகாரிகள்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அதிகாரிகள்.

Updated on
2 min read

சென்னை: மத்​திய விழிப்​புணர்வு ஆணை​யத்​தின் (CVC) உத்​தர​வு​களின்​படி, காம​ராஜர் துறை​முக நிறு​வன​மும் சென்னை துறை​முக ஆணை​ய​மும் ‘கண்​காணிப்பு விழிப்​புணர்வு வாரம் - 2025’ முன்​னிட்டு கடந்த அக்​.27 முதல் நவ.2-ம் தேதி வரைகண்​காணிப்பு விழிப்​புணர்வு வாரத்​தைக் கடைபிடித்​தன.

திறன் மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, கண்​காணிப்பு விழிப்​புணர்வு அலு​வலர்​களுக்​கான ‘தென்​னிந்​திய மண்டல நிறு​வனங்​களுக்​கான பிராந்​திய பயிற்சி / பணிமனை’ ஆக. 22, 23 ஆகிய தேதி​களில் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யைச் சென்னை துறை​முக​மும், இந்​தி​யன் வங்​கி​யும் இணைந்து நடத்​தின. சென்னை துறை​முகம், காம​ராஜர் துறை​முகத்​தின் அதி​காரி​களுக்​கான பல்​வேறு திறன் மேம்​பாட்​டுப் பயிற்​சி​யின்​போது தமிழ், ஆங்​கிலம், இந்தி மொழிகளில் கட்​டுரை / குறுங்​க​விதை எழுதுதல் மற்​றும் விநாடி-​வினா போட்​டிகளும் நடை​பெற்​றன.

வெளிப்​புறத் தொடர்பு நடவடிக்​கை​களின் ஒரு பகு​தி​யாக, பொது​வாழ்​வில் ஊழலை எதிர்க்​கும் விழிப்​புணர்வை உரு​வாக்​கும் நோக்​கில், பொன்​னேரி லோக​நாத நாராயண​சாமி அரசுக் கல்​லூரி மாணவர்​களு​டன் இணைந்து நடை​பயண நிகழ்ச்​சி​யும், கல்​லூரி மற்​றும் பள்ளி மாணவர்​களுக்​கான கட்​டுரை எழுதும் போட்​டி, தமிழ் பேச்​சுப் போட்​டி, போஸ்​டர் தயாரிப்பு போட்​டிகளும் நடத்​தப்​பட்​டன.

இந்த விழா​வில், காம​ராஜர் மற்​றும் சென்னை துறை​முகங்​களின் தலை​வர் சுனில் பாலி​வால், தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்​.​முரளி கிருஷ்ணன் ஐடிஏஎஸ், காம​ராஜர் துறை​முக நிறுவன நிர்​வாக இயக்​குநர் ஜே.பி.ஐரீன் சிந்தி​யா, சென்னை துறை​முக ஆணைய துணைத் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன் ஆகியோர் கலந்​து​கொண்​டு, போட்​டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்​கள் மாணவர்களுக்​கு பரிசுகளை வழங்​கிப் பாராட்​டினர். நிறைவு விழா​வில் பங்​கேற்ற துறை​முக அதி​காரி​கள் பேசி​ய​தாவது;

<div class="paragraphs"><p>காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுக ஆணையத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025’ நிறைவையொட்டி ‘இந்து தமிழ் திசை’யுடன் இணைந்து நடத்திய போட்டிக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது முன்னதாக வெளியிடப்பட்ட ‘கண்காணிப்பு குரல்’ புத்தகத்துடன்  தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன், சென்னை துறை​முக ஆணைய துணைத் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன், காம​ராஜர் மற்​றும் சென்னை துறை​முகங்​களின் தலை​வர்  சுனில் பாலி​வால், காம​ராஜர் துறை​முக நிறுவன நிர்​வாக இயக்​குநர் ஜே.பி.ஐரீன் சிந்​தி​யா</p></div>

காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுக ஆணையத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025’ நிறைவையொட்டி ‘இந்து தமிழ் திசை’யுடன் இணைந்து நடத்திய போட்டிக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது முன்னதாக வெளியிடப்பட்ட ‘கண்காணிப்பு குரல்’ புத்தகத்துடன் தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன், சென்னை துறை​முக ஆணைய துணைத் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன், காம​ராஜர் மற்​றும் சென்னை துறை​முகங்​களின் தலை​வர் சுனில் பாலி​வால், காம​ராஜர் துறை​முக நிறுவன நிர்​வாக இயக்​குநர் ஜே.பி.ஐரீன் சிந்​தி​யா

எஸ்​.​முரளி கிருஷ்ணன்: ஊழல் தடுப்பு விழிப்​புணர்​வு, திறன் மேம்​பாடு, சொத்து மேலாண்மை மற்​றும் டிஜிட்​டல் முன்​முயற்​சிகள் உள்​ளிட்​ட​வற்​றில் மத்​திய விழிப்​புணர்வு ஆணை​யம் மேற்​கொண்டு வரும் பல்​வேறு நடவடிக்​கைகளுக்​கேற்ப நாம் தொடர்ந்து சிறப்​பாகச் செய​லாற்ற வேண்​டும்.

ஜே.பி.ஐரீன் சிந்​தி​யா: நாம் ஒவ்​வொரு வரும் ‘விழிப்​புணர்வு தூத​ராக’ இருந்​து, ஊழலைத் தடுக்​க​வும், சமூகத்​தில் நெறி​முறை மற்​றும் விழிப்​புணர்வு கலாச்​சா​ரத்தை உரு​வாக்​க​வும் வேண்​டும்.

எஸ்​.​விஸ்​வ​நாதன்: ஊழல் தடுப்பு விழிப்​புணர்​வின் முக்​கி​யத்​து​வத்தை நாம் உணர்ந்​து, முழு​மை​யான வெளிப்​படைத் தன்​மை​யுடன் நிர்​வாகத்தை மேற்​கொள்ள வேண்​டும்.

சுனில் பாலி​வால்: ஊழல் என்​பது லஞ்​சம் பெறு​தல் மட்​டுமல்ல; ஒரு​வரின் பொறுப்பை நேர்​மை​யாக​வும் அக்​கறை​யுட​னும் நிறைவேற்​றாததும் ஊழலாகும். மாணவர் சமூகத்​திடம், நேர்​மை​யைப் பேணும் நபர்​கள் மதிக்​கப்பட வேண்​டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

போட்​டிகளில் வென்​றோருக்கு பரிசளிப்பு: 10-வது ஆண்​டாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவர்​களுக்​கான ஆன்​லைன் விநாடி-​வினா போட்​டி​யும், ஆசிரியர்​களுக்​கான கட்​டுரைப் போட்​டி​யும் நடை​பெற்​றன.

ஆன்​லைன் விநாடி-​வினா போட்​டி​யின் நாலெட்ஜ் பார்ட்​ன​ராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்​திருந்​தது. இப்​போட்​டிகளில் சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்டங்​களைச் சேர்ந்த அரசு மற்​றும் தனி​யார் பள்ளி மாணவ-​மாணவி​கள் மற்​றும் ஆசிரியர்​கள் பங்​கேற்​றனர்.

போட்​டிகளில் வெற்றி பெற்​றவர்​களுக்​கான பரிசுகள், கடந்த வியாழனன்று சென்னை துறை​முக அரங்​கில் நடை​பெற்ற கண்​காணிப்பு விழிப்​புணர்வுவார நிறைவு விழா​வில் வழங்​கப்​பட்டன.

சீனியர் பிரி​வில் கீழ்ப்​பாக்​கம் சின்​மயாவித்​யாலயா பள்ளி மாணவி ஹெச்​.சி​வானி முதலிடத்​தை​யும், நந்​தம்​பாக்​கம் ஆர்மி பப்​ளிக் ஸ்கூல் பள்ளி மாணவன் ஜெயத்ராசர்க்​கார் இரண்​டா​மிடத்​தை​யும், அண்​ணா நகர் மேற்கு (விரிவு) சென்னை பப்​ளிக் ஸ்கூல் மாணவி வி.வருணிகா மூன்​றாமிடத்​தை​யும் பெற்​றனர்.

ஜூனியர் பிரி​வில் கே.கே.நகர் பிஎஸ்​பிபி சீனியர் செகண்ட்ரி ஸ்கூல் மாணவர் நவேலன் எம்​.சிவக்​குமரன் முதலிடத்​தை​யும், நந்​தம்​பாக்​கம்

ஆர்மி பப்​ளிக் ஸ்கூல் பள்ளி மாணவி அஜூனி கவுர் இரண்​டா​மிடத்​தை​யும், மறைமலை நகர் சிவானந்த ராஜா​ராம் செகண்ட்ரி ஸ்கூல் மாணவி நிர்விக்னா பீதா மூன்​றாமிடத்​தை​யும் பெற்​றனர்.

ஆசிரியர்​களுக்​கான கட்​டுரைப் போட்​டி​யில், முகப்​பேர் கிழக்கு வேலம்​மாள் மெட்​ரிக் ஹையர் செகண்ட்ரி ஸ்கூல் ஆசிரியை பி.லட்​சுமி முதலிடத்​தை​யும், தி.நகர் குண்​டூர் சுப்​பையா பிள்ளை பெண்​கள் மேனிலைப்​பள்ளி ஆசிரியை எம்​. சசிகலா இரண்​டா​மிடத்​தை​யும், பெரம்​பூர் கலிகி ரங்​க​நாதன் மாண்ட் போர்ட் மெட்​ரிக்ஹையர் செகண்ட்ரி ஸ்கூல் ஆசிரியை க.ஜெய மூன்​றாமிடத்​தை​யும்​ பெற்றனர்​.நிறை​வாக. முது​நிலை மேலா​ளர்​ (விஜி லென்​ஸ்​) பி.செந்​தில்​ நன்​றி கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in