‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025’ முன்னிட்டு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான போட்டிகள்

‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025’ முன்னிட்டு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான போட்டிகள்
Updated on
1 min read

சென்னை: ​காம​ராஜர் துறை​முக நிறு​வனம் மற்​றும் சென்னை துறை​முக ஆணை​யம் ஆகியவை `இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து ‘கண்​காணிப்பு விழிப்​புணர்வு வாரம் - 2025’ முன்​னிட்டு பள்ளி மாணவ-​மாணவி​களுக்​கான விநாடி-வினா போட்​டியை​யும், ஆசிரியர்​களுக்​கான கட்​டுரைப் போட்​டியை​யும் நடத்​துகின்​றன. இதில் சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களைச் சேர்ந்த அரசு மற்​றும் தனி​யார் பள்ளி மாணவ-​மாணவி​கள் மற்​றும் ஆசிரியர்​கள் பங்​கேற்​கலாம்.

‘கண்​காணிப்​பு-நம் அனை​வரின் கூட்​டுப் பொறுப்​பு’ என்​பதை நோக்​க​மாகக் கொண்டு `கண்​காணிப்பு விழிப்​புணர்வு வாரம் - 2025’ அக்​.27 முதல் நவ.2-ம் தேதிவரை நாடெங்​கும் கடைபிடிக்​கப்​பட​விருக்​கிறது.

காம​ராஜர் துறை​முக நிறு​வன​மும், சென்னை துறை​முக ஆணை​ய​மும் கண்​காணிப்பு விழிப்​புணர்வு வாரத்​தையொட்​டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவ-​மாணவி​களிடையே விழிப்​புணர்வை உண்​டாக்​கும் நோக்​கில் கடந்த 9 ஆண்​டு​களாக பல்​வேறு போட்​டிகளை நடத்தி வரு​கின்​றன.

இந்த ஆண்​டும் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்​புணர்​வைப் பரப்​பும் நோக்​கத்​துடன் இந்த விநாடி-​வினா போட்​டியை நடத்​துகின்​றன. இந்த விநாடி-​வினா போட்​டி​யில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ-​மாணவி​கள் ஜூனியர் பிரி​விலும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-​மாணவி​கள் சீனியர் பிரி​விலும் பங்​கேற்​கலாம்.

இந்​தப் போட்​டி​யின் நாலெட்ஜ் பார்ட்​ன​ராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்​துள்​ளது. பள்ளி ஆசிரியர்​களுக்​கான கட்​டுரைப் போட்​டி​யில் பங்​கேற்க விரும்​பும் ஆசிரியர்​கள், `கண்​காணிப்​பு-நம் அனை​வரின் கூட்​டுப்​பொறுப்​பு’ எனும் தலைப்​பில் தமிழில் கட்​டுரையை எழுத வேண்​டும். கூடு​தல் விவரங்​களை அறிய 9791605238 என்ற எண்​ணில் தொடர்பு கொள்​ள​வும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in