Last Updated : 27 Nov, 2023 03:41 PM

2  

Published : 27 Nov 2023 03:41 PM
Last Updated : 27 Nov 2023 03:41 PM

அவசரக் கடன்: உங்களின் எதிர்பாராத நிதித் தேவைகளுக்கு  விரைவான தீர்வு 

இன்றய யூகித்தறிய முடியாத காலச்சூழலில் திடீரென்று எதிர்பாராமல் விளையக் கூடிய ஒரு அவசர மருத்துவ செலவு, கார் ரிப்பேர் செலவு அல்லது ஒரு அவசர வீட்டு செலவுகள் போன்ற எதுவாக இருந்தாலும், அதற்கான நிதியை விரைந்து உடனடியாகப் பெறும் வகையில் வசதிகள் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது . எதிர்பாராத செலவுகளுக்கான நிதித் தேவை பிரச்சினைகள் ஏற்படும் அம்மாதிரியான சந்தர்ப்பங்களை எளிதாகக் கடந்து செல்ல விரைந்து வழங்கப்படும் அவசர கால கடன் வசதி ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக அமையும்.

அவசர கால கடன் வசதியை புரிந்து கொள்ளுதல்: நிதி தேவைப்படும் ஒரு சிக்கலான நிலையில் நீங்கள் இருக்கும் போது எமர்ஜான்சி லோன்கள் (emergency loans) அல்லது துரிதக் கடன் என்றும் குறிப்பிடப்படுகிற இந்த அவசரகாலக் கடன்கள் அதற்கான நிதித் தீர்வுகளை விரைந்து வழங்குகிறது. உடனடி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கேன்றே இந்த கடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் விண்ணப்ப நடைமுறைகள் அதி விரைவாகவும் எந்த ஒரு பிரச்சினையுமில்லாத வகையில் அமைந்துள்ளது. உங்களின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் திடீரென்று எழும் நிதிச்செலவுகள் ஆக்கியவற்றுக்கிடையேயுள்ள இடைவெளியை நிரப்ப உதவுவதன் மூலம் அவை உங்களுக்கான ஒரு பாதுகாப்பு வளையமாக செயல்படுகின்றன. உங்கள் அவசர நிதித்தேவைகளுக்கான கடனை உடனடியாகப் பெற பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா லோன் ஐ கருத்தில் கொள்வது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். ரூ. 12,76,500 வரையிலான முன் தீர்மானிக்கப்பட்ட தொகையை இன்ஸ்டா பெர்சனல் லோன் கடனாக வழங்குகிறது மற்றும் அந்தக் கடன் தொகை வெறும் 30 நிமிடத்திலிருந்து* 4 மணி நேரத்திற்குள் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும் .

எளிதான விண்ணப்ப நடைமுறைகள்: அவசர கடன் வசதியின் ஒரு முக்கியமான சாதகமான விஷயம் என்னவென்றால் அதன் எளிமையான விண்ணப்ப நடைம்றைகள்தான். நடைமுறையிலுள்ள வழக்கமாக கடன் திட்டங்களில் நீண்ட நெடிய விண்ணப்ப நடைமுறைகள், விரிவான ஆவணப்படுத்தல்களின் தேவைகள் மற்றும் ஒரு முழுமையான கடன் தகுதி சரிபார்ப்புகள் சலிப்பூட்டக்கூடிய அளவில் இருக்கும். அவசரகால கடன்திட்டங்கள் உங்கள் நிதித்தேவையின் அவசரத்தை உணர்ந்து அதன் நடைமுறைகளை எளிமைப்படுத்தியிருக்கிறது.

பெரும்பாலான துரித கடன் (quick loans ) வழங்குனர்கள் ஆன்லைன் தளங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் உங்கள் வீட்டிலிருந்தபடியே வசதியாக கடனுக்கு விண்ணப்பிக்கும் வசதியை உங்களுக்கு வழங்குகிறார்கள். மேலும் ஆவணப்படுத்தல்களுக்கான தேவை மிகவும் குறைவாகவே இருக்கும் அதில், அடையாள சான்று , வருமானம் மற்றும் குடியிருப்பு போன்ற குறிப்பிட்ட சில தேவைகளே அடங்கியிருக்கும். கடன் ஒப்புதலளிக்கும் செயல்பாடுகளை இந்த எளிய நடைமுறைகள் துரிதப்படுத்துவதுடன் பல்வேறுவகையான கடன் வசதிகளை கொண்ட வரலாறுகளைக் கொண்ட தனிநபர்களும் அவர்களுக்குத் தேவையான நிதியுதவியைப் பெற அணுகுவதை அது உறுதி செய்கிறது.

பஜாஜ் பைனான்ஸ் இன்ஸ்டா லோனைப் பொருத்தவரை கடன்தாரருக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவரது கடன் தகுதி சரிபார்க்கப்பட்டுவிடுகிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்கள் கடனைப் பெறுவதற்காக எந்த ஒரு ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டிய தேவையும் இல்லை. உங்களுக்கான அவசரகால நிதித்தேவைகளுக்கு எந்த ஒரு பிரசினையுமில்லாமல் விரைவாக நிதியை பெற இது உகந்த ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

அதிவிரைவான கடன் ஒப்புதல் மற்றும் கடன் வழங்கல்: எதிர்பாராத நிதி தேவைகளுக்கான சவால்களை எதிர்கொள்ளும் போது கால அவகாசம் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கடனுக்கான ஒப்புதல் மற்றும் தொகை வழங்குவது போன்றவற்றை அதிவிரைவில் நிறைவேற்றுவதன் மூலம் அவசர காலக் கடன்,திட்டங்கள் தங்களைத் தனித்து அடையாளப்படுத்துகின்றன. பல சந்தர்ப்பங்களில் உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கபட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே உங்கள் கடனுக்கான ஒப்புதல் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். மற்றும் அன்றைய தினமே அந்தக் கடன் தொகை உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். இன்ஸ்டா பெர்சனல் லோன் போன்ற, உங்களுக்கான முன் தீர்மானிக்கப்பட்ட கடன் வழங்கல் திட்டம் எதுவும் இருந்தால், இந்த நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்பட்டு உங்களுக்குத் தேவையான நிதியை சரியான நேரத்தில் நீங்கள் பெறுவதை உறுதி செய்யும்.

கடன் தொகை திருப்பிச் செலுத்த நெகிழ்வான காலவரை வாய்ப்புக்கள்: கடன் தொகையை திருப்பிச்செலுத்த உங்கள் நிதி நிலைக்குத் தகுந்தவாறு கடன் தொகையை அமைத்துக் கொள்ள அல்லது கடன் காலத்தை வரையறுத்துக் கொள்ளும் நெகிழ்வான வாய்ப்புக்களை அவசர கால கடன் திட்டங்கள் வழங்குகின்றன. . குறிப்பாக உங்கள் நிதி நிலையின் ஸ்திரத்தன்மையை தற்காலிகமாக தடுமாறச்செய்யும் எந்த ஒரு எதிர்பாராத நிதிச்செலவுகளின் நெருக்கடியையும் சமாளிக்க இந்த நெகிழ்வுத் தன்மை இருப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. வாழ்க்கை நிகழ்வுகள் யூகித்தறியமுடியாதவை மற்றும் அதன் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறுதல்களுக்குட்பட்டவை என்பதை கடன் வழங்குனர்கள் அறிவார்கள் எனவேதான் கடன்தொகையை திருப்பிச்செலுத்த குறுகிய கால மற்றும் நீண்ட கால விருப்பத்தேர்வுகளின் அடிபப்டையில் இரண்டு திட்டங்களை வழங்குகிறார்கள்.

ஒரு அவசரகால கடனை ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கு முன்பாக கடன் திட்டத்தின் வட்டிவிகிதங்கள், திருப்பிச்செலுத்தும் அட்டவணைகள் உட்பட அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீளாய்வு செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. அதன் மூலம் நீங்கள் தகவலளிக்கப்பட்ட முடிவைத்தான் எடுக்கிறீர்கள் மற்றும் உங்கள் நிதி நிலைமைக்கு இணக்கமான திருப்பிச்செலுத்தும் திட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதையும் அது உறுதி செய்யும் .

முடிவாக, எதிர்பாராது திடீரென்று ஏற்படும் நிதித் தேவைகளுக்கு ஒரு நம்பகமான தீர்வாக அவசரகாலக் கடன்கள் உதவுகின்றன. நிதிப் பிரச்சினை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதன் எளிமை, ஒப்புதல் விரைவாக வழங்குதல், மற்றும் அதன் நெகிழ்வுத் தன்மை அவற்றை ஒரு மதிப்பு மிக்க வள ஆதாரமாகத் திகழச்செய்கின்றது. உங்கள் நிதித்தேவைகள் குறித்த ஒரு தெளிவான புரிதலுடன் அவசரகால கடன்களை அணுகுவது மற்றும் கடன்பெறுவதில் ஒரு பொறுப்புடன் கூடிய உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதன் மூலம் எதிர்பாராத சவால்களை நம்பிக்கையுடனும் மற்றும் எளிதாகவும் எளிதாகவும் எதிர்கொண்டு அதைக் கடந்து செல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x