யூடியூப் பகிர்வு: சித்ரகோட் அருவி... இந்தியாவின் நயாகரா!

யூடியூப் பகிர்வு: சித்ரகோட் அருவி... இந்தியாவின் நயாகரா!
Updated on
1 min read

இயற்கையின் அதிசயங்களில் ஒன்று தண்ணீர். அதுவே ஏரியாகவும், குளமாகவும், ஆறாகவும், அருவியாகவும், கடலாகவும் மாறி காண்பவர் உடலையும் மனதையும் குளிர்விக்கிறது.

சத்தீஸ்கர் - அடர்ந்த காடுகளைக் கொண்ட மத்திய இந்திய மாநிலம். இங்குள்ள பாஸ்டர் மாவட்டத்தில் மழைக்காலம் ஜூலையில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கிறது. அங்கு பாயும் இந்திராவதி நதி மழைக்காலத்தில் தன் பாய்ச்சலில் வேகமெடுக்கிறது.

பாய்ந்தோடும் இந்திராவதி நதி, சித்ரகோட்டில் சுமார் 980 அடியில் அருவியாக உருவெடுக்கிறது. இதனால் சித்ராகோட் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் அகன்ற அருவியாகவும் கருதப்படுகிறது. குதிரை லாட வடிவில் இதன் பள்ளத்தாக்கு அமைந்திருப்பதால் இது இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மிக்கத்தக்க வகையில் பாயும் இந்திராவதி நதி கடைசியில் கோதாவரியுடன் சென்று கலக்கிறது.

பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியின் பிரவாகத்தைக் காண

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in