Published : 17 May 2016 09:55 AM
Last Updated : 17 May 2016 09:55 AM

காப்பிராயன் கவிதை

ஓட்டுப் போட்ட ஜனங்களுக்கு
கோடி கோடி நன்றி
உண்மையான உங்களால
உசருமே நம்ம கன்ட்ரி!

ஏழையோ நீ பணக்காரனோ
ஏதோ ஒண்ணு இருக்கட்டும்
வாக்களிச்சு கடமை செஞ்ச
உன்னை ஊரு வணங்கட்டும்!

மழை பெஞ்ச இடத்துலெல்லாம்
போலிங் ரேட்டிங் ஜாஸ்தி
சென்னை நகர மக்களுக்கு
என்னாப்பா ஆச்சி?

இலவசத்த குடுக்குறப்ப
ஓடிப் போய் வாங்குற
ஓட்டு மட்டும் போடாமலே
வீட்டில் படுத்து தூங்குற!

பணக்கார திமிரு தனத்தை
ஓட்டுல ஏன் காட்டுற?
பூத்து பக்கம் போகாமலே
காரில் ஏனோ சுத்துற?

வாட்சப்ல வக்கனையா மொழங்குற
வாக்களிக்க மட்டும் வர மாட்டேங்குற
ஒலக மகா நியாயம் பேஸ்புக்ல பேசுற
ஓட்டு போடாம எங்கயோ ஒளிஞ்சுக்கற

விரல் மை வைக்காத உன்னால
எல்லாருக்கும் அசிங்கம்
எப்படிப்பா நம்ம நாடு
இதுக்கு மேல உசரும்?

ஆடு மாடு இல்லப்பா - நீயும்
அறிவு கொண்ட மனுசன்
இனியாச்சும் ஓட்டுப் போடு
வாழ்த்தும்யா தேர்தல் கமிஷன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x