Published : 06 May 2016 07:48 AM
Last Updated : 06 May 2016 07:48 AM

காப்பிராயன் கவிதை - நம்பர் 1 தமிழ்நாடு

சாதி பார்த்து நீயும்
ஓட்டுப் போடக் கூடாது
சொந்தக்காரன் சொல்லுறான்னு
கேட்டுப் போடக் கூடாது!

துட்டு தர்ற பார்ட்டிய நீ
தூக்கி விடக் கூடாது
லஞ்ச ஊழல்காரனுக்கு
லட்டு தரக் கூடாது!

ஏதோ ஒரு பட்டன நீ
அழுத்திப்புட்டா ஆகாது
சும்மா வெறும் சடங்குன்னு
நெனச்சுக்கிடக் கூடாது!

யாருக்கு நீ எதுக்காக
ஓட்டுப் போட நெனைக்கிற?
நல்லா நீயும் யோசிச்சு
வாக்களிச்சா தேவல!

அழுக்கான அரசியல
சோப்புப் போட்டு வெளுக்கணும்
நேர்மையான ஆளுங்கள
நீதாண்டா வளர்க்கணும்!

உன்னோட முடிவால
நம்ம நாடு ஒசரணும்
உலகத்துல தமிழ்நாடு
ஒண்ணாம் நம்பர் ஆகணும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x