

அவள்...
அவள்தானே எல்லாம்...
அவளால்தானே நாம்...
அவளில்தானே இந்த உலகம்...
அவள் யார்?
*
அன்பு காட்ட அன்னையாக..
சண்டையிடத் தங்கையாக..
சாய்ந்துகொள்ள தோழியாக..
கரம் பற்றக் காதலியாக..
உயிர் கொள்ள மனைவியாக..
பெயர் சொல்லப் பிள்ளையாக..
யார் அவள்?
*
இந்த மகளிர் தினச் சிறப்பு வீடியோ பாடல் பதிவைக் கொஞ்சம் பாருங்களேன்..
</p><p xmlns="">அன்னையாய், பெண்களை மட்டுமே காட்டாமல், பொம்மலாட்டம் மற்றும் நாட்டியத்தின் வழியாக பெண்களைக் காட்சிப்படுத்தியது நல்ல முயற்சி. நமது பாரம்பரியத்தின் இரு வேறு கலைகளை ஒருங்கிணைத்த யோசனையில் புதுமை தெறிக்கிறது.</p><p xmlns="">பொம்மலாட்டத் தாயின் முகத்தில் மிளிரும் தாய்மையும், அதற்கேற்ற வரிகளும் படத்துடன் நம்மை ஒன்றிப்போகச் செய்கின்றன. முக்கியமாக</p><p xmlns=""><i>வலி சுமந்தாள் - உயிர் பெற்றோம்!</i></p><p xmlns=""><i>கை பிடித்தாள் - நடை கற்றோம்!</i></p><p xmlns="">என்ற வரிகளுக்கான அபிநயங்களும், பாவனைகளும் நம் பால்யத்தை நினைக்கச் செய்கின்றன.</p><p xmlns="">வடிவரசு ப்ரதீபனின் பாடல் வரிகள், படத்துக்கு அச்சாரமாய் அமைந்திருக்கின்றன. பாடலை ஒட்டி அமைந்திருக்கும் காட்சிகள், படத்தின் பெரும் பலம். ஷ்ரவனின் இசையும், குரலும் பாடலை உயிர்ப்பித்திருக்கிறது. சந்தோஷின் படத்தொகுப்பு கச்சிதம்.</p><p xmlns="">தொப்புள்கொடி வழி உறவு அது; தொலைந்து போகாது. அதன் வீரியத்தைச் சிதைக்காமல் செதுக்கியிருக்கிறது படக் குழு. 'அவள்'களுக்காக 'அவன்'களின் சமர்ப்பணத்துக்கு, எங்களின் ஸ்பெஷல் பூங்கொத்து!</p>