Published : 02 Mar 2016 09:33 AM
Last Updated : 02 Mar 2016 09:33 AM

ஊதுறாய்ங்கப்பா ஊர்க்காரய்ய்ங்க!- கோஷ்டி கானம் இல்லை

‘சத்யமா பவன் முன்ன மாரி இல்ல.. ரொம்ப அமய்தியா ருக்கு.. கீஷ்ட்டு கானமும் இல்ல.. கோஷ்ட்டி கானமும் இல்ல.. அப்ப நம்ம காங்கிரசு திருந்திடுச்சா?!’

- சத்யமூர்த்தி பவன் கேட்ட புடிச்சி நின்னுட்ருந்த பளீர் கதர்ச்சட்ட பெருசு கண்ணு கலங்கி லேசா முணுமுணுத்துச்சு..

அய்யா.. சித்த நேரத்ல சிந்த மயங்கி காங்ரசப் பத்தி என்னென்னமோ நெனச்சுட்டீங்களே.. நீங்க த்யாகியாய்யா?? ஒங்களுக்கு நானு வெளக்கம் சொல்லியே ஆகணுமே!

பாக்கத் துப்பிட்டு படக்னு திரும்புச்சு பளீர் பெருசு.. படபடனு பேச ஆரமிச்சாரு பக்கத்துல வந்து நின்ன அழுக்கு கதர்ச்சட்டை ஆசாமி.

கச்சிக் கலர்ல இருந்த சத்ய மூர்த்தி பவன் பேர அழிச்சிட்டு கலர மாத்திட்டாங்க.. பாத்தீங்களா..? இதுதான் மயங்க வெக்கிற வேல.. டீசண்ட்டா மாத்துறாங்களாமாங்..

ஈவிகேசு தலிவர் ஆனதுக்கப்றந்தான் பவன் கள கட்ட ஆரமிச்சுச்சு.. திராவிடக் கச்சிங்களயே கலங்க வெக்கிறா மாரி அடிச்சு வுட்றாருல்ல.. கசகசன்னு பவன்ல திர்ஞ்ச அம்புட்டு கோஷ்ட்டிக்கும் டெல்லி ரூட்லயே ஆப்படிச்சுட்டாருங்கய்யா.. அது எவ்ளோ பெர்ய தப்புனு இப்பந்தான் தெர்ய ஆரமிச்சுருக்கு..

கேட்ட வுட்டுட்டு காம்பவுண்டு பக்கமாக வந்து வசதியா ஒக்காந்துக்ருச்சு பளீர் பெருசு.. பேச்ச வுடல அழுக்கு.

கதர்ச்சட்டய்ங்க நாலு கோஷ்ட்டியா வந்தாத்தான பவன்ல முட்டலு மோதலுனு கலகலப்பா இர்க்கும். இப்ப என்னடான்னா எதிர்த்த கடய்ல பன்னு பிஸ்கட்டு சேல்சே அடி வாங்கிருச்சுனா பாத்துக்கங்க.. குச்பூ, நக்க்மா வர்ற அன்னிக்கு நாலஞ்சு பேர் ஓடியார்றான். யார்றானு பாத்தா பத்திரிககாரன். குச்பூ, நக்மாவ வச்சு அஞ்சு பத்து பொம்பளய்ங்களும் வருதுங்க.. அன்னிக்கு மட்டும் பவன்ல ஏதோ பாலிடிஸ் பண்றா மாரி தெர்யும்.

கோஷ்ட்டிய இங்க களச்சு வுட்டுட்டாரு ஈவிகேசு.. அம்புட்டு கோஷ்ட்டியும் பிளய்ட் புடிச்சு டெல்லிக்கு போக ஆரமிச்சுருச்சு.. அங்கன யாரப் பாக்க முடியுமோ அவங்கள பாத்து, ‘ஈவிகேசு இம்ச தாங்க முடியல.. ஆ..ஊன்னா குச்பூவ கொம்பு சீவி வுடுறாரு.. அதுக்குப் பதில் சொல்ல முடியாம பரம்பர காங்கிரஸ்காரன் பைத்யமா அலைய்றான். ஈவிகேச எப்டியாச்சும் தூக்கிடுங்க’னு கம்ளைண்ட்ட குடுத்துடறாய்ங்க.. அடுத்த பிளைட்ல போய் அந்த கம்ளைண்ட்ட கிழிச்சு போட வச்சுட்டு வர்றதுக்கே ஈவிகேசுக்கு நேரம் சர்யா இருக்கு.. இப்ப என்னமோ ராகுலு கண்டிசனா சொல்லிட்டாராம். யாராச்சும் கம்ளைண்ட்டோட டெல்லிப் பக்கட்டு வந்தீங்கன்னா.. ஒங்கள கச்சிலர்ந்தே கடாசிடு வேன்னுட்டு.. இப்பம் டெல்லிப் போக்குவரத்து கொறஞ்சிருக்காம்.

ஈவிகேசு யோகம் காங்கிரச டியெம்கே உள்ள இழுத்துப் போட்டுக்குச்சு.. கதர்ச்சட்டய்ங் கள்லாம் குசியாகி, வேட்டி சட்டய்க்கு கஞ்சி போட ஆரமிச்சுருங்க.. காங்கிரசு 35 கேட்டுச்சு.. கலைஞ்சரு 25க்கு ஓகே சொல்லிட்டாருன்னு பவன்ல பேசிக்கறாங்க.. குச்பூக்கு மட்டும் சீட்டு குடுக்கப்புடாதுன்னு ஈவிகேசுகிட்ட டியெம்கே ஸ்ட்ராங்க்கா சொல்லிருக்காம். பழச மறக்கச் சொல்லணும்.. மெட்ராசுப் பக்கம் வேணவே வேணாம். வூட்டுக்காரு ஊரு ஈரோடு பக்கம் சீட் கெடச்சாக் கூட போதுங்கிற மாரி குச்பூ சொல்லிருக்காங்களாம். ஈவிகேசு இத எப்டி சால்வ் பண்றதுனு புர்யாம தவிக்கிறாரு. அடிக்கடி நக்க்மா வர்றது வேற குச்பூவுக்கு கொடச்சல் ஆயிடுது. விஜய தாரணி பங்குங்கு அதுவும் அப்பப்ப டெல்லிலயே போய் ஒக்காந் துட்டு இங்க இருக்கறவய்ங்களுக்கு போன் போட்டு கொக்கரிக்குது. இதுமாரி கொடய்ச்சல் எல்லாத்தயும் தாங்குனாத்தான் காங்கிரசு கச்சில தலய்வனா இருக்க முடியும் போல.

மத்தபடி எல்லா கோஷ்ட்டி தலிவருங்களும் அவங்கவுங்க புள்ளைங்களுக்குத் தான் சீட்டு கேக்கறாங்களாம். கோஷ்ட்டிக்கு ஒண்ணுன்னா கூட தலய்ங்களோட புள்ளைங்களுக்குப் போக ஒண்ணு ரெண்டுதான் மிஞ்சும். அதுக்கு இப்பமே அடிச்சுக்கணுமா.. இன்னுங் கொஞ்சம் வெளிச்சம் தெர்யட்டும்.. டெல்லிக்குப் போய்ட்டு வந்துறலாம்னு தலய்ங்க வெயிட் பண்ணுதாம்..

ஏம்ப்பா.. கச்சில நீயும் ஒரு கோஷ்ட்டிக்குத் தலிவனா? ஈவிகேச விட நெறயா பேசுறி யேப்பா?

அப்டில்லங்கய்யா.. ஒங்க பேஸ்கட்ட பாத்ததும் வெள்ளந்தியா தெரிஞ்சுச்சு.. அதான் தெர்ஞ்சத கொட்டிறலாம்னு..

ரொம்ப சந்தோஷம்யா.. சீக்கிரஞ் சொல்லி முடி..

ஏடியெம்கேல அமச்சர், எம்மெல்லேக்களாக இருந்தவங்க போட்டியிடற தொகுதியாப் பாத்து காங்கிரசுக்குத் தள்ளிடலாம்னு டியெம்கே தளபதி திட்டம் வச்சுருக்கறாராம். காங்கிரசுல நேர்காணல்னு ஒரு காமடி நடந்துக்கிட்ருக்கு. அதுல முக்காவாசிக்கும் மேல ஈவிகேசு ஆளுங்கதான் கலந்துட்ருக்காங்க.. கச்சில சீனியரு யசோதாவுக்குச் சமமா குச்பூவும் நேர் காணல்ல ஒக்காந்துருக்காங்க.. வர்றவன் குச்பூவப் பாத்துக் கும்பிட்டுச் சிரிக்குறான். ’என்னக்கா.. டீட்டெய்லு போதுமான்னு யசோத வப் பாத்து எளக்காரமா கேக்குறான். தன்னோட ஆதரவு மாவட்டத் தலய்வருங்களுக்கு சீட் கெடய்க்கிறா மாரிதான் ஈவிகேசு பிளான் பண்றாராம்.. நேர்காணலுக்கு வந்தாதான் சீட்டு வாங்குறதுக்கே தகுதியிருக்கும்னு ஈவிகேசு சொன்னதக் கேட்டு அம்புட்டு கோஷ்ட்டியும் அதிர்வேட்டு சிரிப்பு சிரிக்குது..

அண்ணன் தங்கபாலு இருக்காக.. அண்ண னுக்கு அண்ணன் கிருஸ்ணசாமி இருக்காக.. செதம்பரம் கெளம்பிட்டாக.. அம்மணி நக்மா வந்து போறாக.. வர்த்தகர் வசந்தகுமார் இருக் காக.. செல்லக்குமார் இருக்காக.. இன்னும் இன்னும் கோஷ்ட்டி தலய்வருங்க எல்லாம் டெல்லில ஆக்டிவ்வா இருக்காக.. பின்ன ஈவிகேசு இப்டிச் சொல்லலாமா?

காங்கிரஸ் கலாட்டா
காலத்தால் அழியாதது..
சீட்டுகள் டெல்லியில்
நிச்சயிக்கப்படுகின்றன!

அழுக்கு சொன்ன பஞ்ச்சை ரசித்தபடியே இடத்தைக் காலி செய்தது பளீர் பெருசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x