

குறள்
பொருள்:
வெளித்தோற்றத்தில் குன்றிமணியைப் போல் செம்மையானவராகக் காட்சி தந்தாலும், அந்தக் குன்றிமணியின் மூக்கைப் போல கருத்த மனம் கொண்டவர்களும் உலகில் உண்டு.
குன்றிமணியின் மூக்கில் இருந்துதான், குன்றிமணி மரமாக முளைவிட்டு, பின் வளர்ந்து கிளை பரப்பும். அது போல மனிதனுடைய மனதில் இருந்துதான் சிந்தனைகள் முளைத்து, அது விரிந்து வாழ்க்கை ஏற்படுகிறது. வாழ்கையின் முளை தோன்றக் கூடிய மனம் தீமையில் நிறைந்து இருண்டு போனால் அங்கிருந்து வெளிவரும் எண்ணங்களும் தீயனவாகவே இருக்கும்.
விளக்கம்:
மகாபாரதத்தில் சலிப்புற்று போர்க்களத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்ற தவிப்போடு நிற்கிறான் அர்சுனன். ஆயுதங்களைக் கிழே போடுவதற்கான தனது நிலையை நியாயப் படுத்த முயற்சிக்கிறான். அதுபோல சில சமயங்களில் மனித நிலையும் ஏறத்தாழ அப்படியிருக்கும். உணர்ச்சி களுக்கு வசப்பட்டுவிடுகிற நாம், அவற்றை நியாயப் படுத்துவதற்கான தர்க்க வாதங்களிலும் முயற்சிகளிலும் இறங்கிவிடுகிறோம்.
தனது ஆணவத்தால் எடுத்துவிட்ட ஒரு முடிவை உறுதி செய்யும் வகையில், அதாவது தன்னுடைய நியதியை உறுதி செய்யும் வகையில், பல்வேறு வகை ஆதாரங்களையும் மனம் தேடும். தேடிக் கண்டு பிடித்து அதுவே சரி என்று சாதிக்கும். நம்மைப் பற்றி நாம் நம் மனதில் கொள்ளும் இத்தகைய பொய் வடிவம், நம் வாழ்க்கையில் நம் செயல்களுக்கும் மன அமைதிக்கும் ஆதாரம் போலத் தோற்றம் தரலாம். ஆனால் இது உண்மை இல்லை. நம்முடைய விதி நம்மை எவ்வாறு இருக்கச் செய்கிறதோ அவ்வாறுதான் நாம் இருக்கிறோம். நாமாகக் கற்பனை செய்துகொள்ளும் பொய் பிம்பத்தை வைத்து நாம் எதுவும் சாதிப்பதில்லை; சாதிக்கவும் இயலாது.
குறள்
பொருள்:
அடக்கம் என்னும் பண்பை ஒரு செல்வம் போல் பேணிக் காக்க வேண்டும். மனிதர்களுக்கு அதைவிடச் சிறந்த நன்மை இல்லை. மனம், சொல், செயல் ஆகிய மூன்றையும் கட்டுபடுத்தி வாழ வேண்டும். அவ்விதம் அடங்கி வாழ்தலே ஆக்கம் பெருக்குவதற்கு வழியாகும்.
விளக்கம்:
முன்னொரு காலத்தில் இரண்டு அரசர்கள் இருந்தனர். ஒருவருடைய ஆட்சியானது சண்டை, சச்சரவு, குழப்பங்களுக்குப் பேர்போனது. தனது அரசின் அவலநிலைமையைக் கண்டு மனம் நொந்த அந்த அரசர், மற்றவரின் நாட்டுக்குப் போனார். ‘உங்கள் நாட்டில் அவலநிலை உண்டா?’ என வினவினார். அவர் ’இல்லை’ என்றார். அப்படியா ‘எனது ஆட்சியில் நாட்டின் அவல நிலையை என்னால் மாற்றவே முடியவில்லை. உங்களுடைய நாடு செழுமையாக இருப்பதற்கு என்ன காரணம்?’ என்று விசாரித்தார். அந்த அரசர் சொன்னார்: ‘என் ஆட்சியை நான்கு பேர் காவல் காக்கிறார்கள். முதல் காவலாளி உண்மை. எனது நாட்டின் எந்தக் குடிமகனும் அதர்மக் காரியங்களிலோ, அறமற்றச் செயல்பாடுகளிலோ சிறிதுகூட ஈடுபடுவதே இல்லை. இரண்டாவது காவலாளி நீதி. என் நாட்டில் எவருமே நீதி வழுவுவதில்லை. மூன்றாவது காவலாளி அன்பு. மக்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும், இனிமையுடனும் பழகுகின்றனர். எனவே ஆக்கிரமிப்போ சுரண்டலோ இல்லை. நான்காவது காவலாளி மிக மிக முக்கியமானவர். அவரது பெயர் தியாகம். மக்கள் அனைவரும் பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்கள். என் நாட்டில் சுயநலத்துக்கு சுத்தமாக இடமே இல்லை’’’ என்றார்.
- நல்வழி நீளும்…