Published : 18 Feb 2016 05:38 PM
Last Updated : 18 Feb 2016 05:38 PM

பழைய நெனப்பு!

1957-ல் நடந்த சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டது திமுக. 1962 வரை திமுக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்படவில்லை. எனவே, 1957 தேர்தலில் திமுக உறுப்பினர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். அப்போது திமுகவின் சில வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 13 இடங்களை வென்றது திமுக. குளித்தலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகிறார் மு. கருணாநிதி. அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

படம்:‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x