பணவீக்கம் குறித்து நிபுணர் விளக்கம்

பணவீக்கம் குறித்து நிபுணர் விளக்கம்
Updated on
1 min read

பணவீக்கம் தொடர்பாக பொரு ளாதார நிபுணர் குண்டலகேசி நமக்கு செல்போன் மூலம் விளக்கம் அளிக் கிறார். இனி அவரது பேட்டி தொடர் கிறது. (இனி: நி=நிருபர், கு=குண்டல கேசி)

நி: பணவீக்கம் என்றால் என்ன சார்?

கு: சில பேரு இதை வெளியில சொல்ல வெட்கப்படறாங்க. இதுல வெட்கப் படுறதுக்கு ஒண்ணுமே இல்ல. காத்து ஊத ஊத பலூன் வீங்குற மாதிரி..

நி: விலை வீங்குறதால பணவீக்கம் ஏற்படுதுன்றீங்க. சரி, விலை ஏறிப் போன உணவுப் பொருள், காபி, டீ, மீன், காய்கறிக்கும் இதுக்கும் சம்பந் தம் இருக்கா?

கு: அப்படி பொதுவா சொல்ல முடி யாது. ஆனா, கொத்தமல்லி, புளியங் கொட்டை தோல், ஆடுதீண்டாப்பாளை, கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

நி: சார், டவர் பிராப்ளம்.. சரி, அடுத்த கேள் விக்குப் போகலாம். கடந்த ஆட்சியி லும் இதே பிரச்சினை இருந்துச்சே.

கு: இது பரம்பரைக் கோளாறு இல்லை.

நி: சார், விட்டு விட்டு கேக்குது. மத் திய அரசோட பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகளால இந்த பிரச் சினை சரியாகும்றீங்களா? தொழில், உற்பத்தி துறையில கவனம் செலுத்த வேண்டுமா?

கு: சவ்வுச் சுரப்பு நீர் அதிக உற்பத்தி யாலக்கூட இருக்கலாம். ஆனா, சாதா ரண நடவடிக்கை பத்தாதுங்கிறது என் கருத்து. ஆபரேஷன்தான் ஒரே வழி.

நி: (பதிலே சரியில்ல.. மஞ்சக் கலர், ரோஸ் கலர் நோட்டீஸ் கணக் காவே பேசிட்டிருக்காரே) மன்னிக் கவும்! பொருளாதார நிபுணர் குண்டல கேசியின் நம்பருக்கு பதிலாக பரம்பரை வைத்தியர் நாடிவைத்திய சிகாமணி குண்டலகேசிக்கு போன் போட்டதற்கு வருந்துகிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in