Published : 12 Dec 2019 02:24 PM
Last Updated : 12 Dec 2019 02:24 PM

தாயை மோதிய காரை காலால் உதைத்து கோபித்துக் கொண்ட சிறுவன்: கொண்டாடும் நெட்டிசன்கள்

சீனாவில் சிறுவன் ஒருவர் தன் தாய் மீது மோதிய காரை காலால் மிதித்தும் ஆவேசமாகக் குரல் எழுப்பியும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் சிறுவனின் கோபத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் தனது மகனை வலது கையில் பிடித்தவாறு சாலையைக் கடப்பார்.

அப்போது அவரின் இடது புறத்திலிருந்து வரும் கார் ஒன்று அப்பெண் மீது மோதுகிறது. நல்வாய்ப்பாக கார் பலமாக மோதவில்லை. இதனால் அப்பெண் சாலையில் தடுமாறி விழுகிறார். உடனே தாயை ஆசுவாசப்படுத்தும் சிறுவன் கார் மீது எட்டி உதைக்கிறார்.

அதற்குள் வண்டியை ஓட்டிவந்த நபர் கீழே இறங்கிவர அவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டே வேகமாக தாயின் அருகே ஓடி அவரின் நலத்தை உறுதி செய்கிறார். அதற்குள் அங்கே சிறு கூட்டம் கூடுகிறது.

காரை ஓட்டி வந்த நபர் அந்தப்பெண்ணை தனது காரின் பின்புறத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.
சில விநாடிகளே நீளும் இந்த வீடியோவில் சிறுவனின் தாய்ப் பாசமும் அவரின் கோபமும் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x